சென்னை: தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983 ன் கீழ் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 தேதி முதல் ஜீன் 14 வரை மீன்பிடி தடைக்காலம் 61 நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இம்மீன்பிடி தடைகாலத்தில் தமிழக கடலோர பகுதிகளிலுள்ள மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இழுவலைப்படகுகள் மீன்பிடி துறைமுகம் / தங்குதளத்திலிருந்து கடலில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அண்டை மாநிலமான ஆந்திர மாநிலத்தில் மீன்பிடி தடைகாலத்தில் இயந்திரம் பொருத்தப்பட்ட அனைத்து வகை மீன்பிடி கலன்கள் கடலில் மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில். சென்னை மாவட்டத்திலுள்ள இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப்படகுகள் ஆந்திர மாநில கடல்பகுதிக்கு கண்டிப்பாக செல்லக்கூடாது எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கிழக்கு கடற்கரை மீன்பிடி தடைகாலம் அமலுக்கு முன்னர் 14.04.2026 இரவு 12 மணிக்குள் கடலுக்கு சென்ற மீன்பிடி விசைப்படகுகள் அனைத்தும் கட்டாயம் கரைக்கு திரும்பிட வேண்டும் 14.04.2026 இரவு 12 மணிக்கு பிறகும் கரை திரும்பும் மீன்பிடி விசைப்படகுகள் மீது தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை சென்னை மாவட்ட மீன்பிடி விசைப்படகு உரிமையாளர்களுக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
