மேட்டுமருதூரில் அருகே ரூ.2 கோடியே 95 லட்சத்தில் பாலம் சீரமைப்பு

*மக்கள் மகிழ்ச்சி

குளித்தலை : மேட்டுமருதூரில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட வலுவிழந்த காட்டுவாரி வாய்க்கால் ரூ.2 கோடியே 95 லட்சம் மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டும் பணி நடைபெறுகிறது,கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் பஞ்சப்பட்டியில் இருந்து வரும் தண்ணீர் காட்டுவாரி வாய்க்காலில் கலந்து புதுப்பட்டி, மேல குட்டப்பட்டி, வீரவல்லி, கோட்டைமேடு, கருங்கல்லா பள்ளி, கூடலூர், மேட்டுமருதூர், குமாரமங்கலம், வழியாக பெட்டவாய்த்தலை காவிரி ஆற்றில் கலந்து செல்கிறது.

இந்நிலையில் திருச்சி கரூர் மெயின் ரோட்டில் இருந்து 100 ஆண்டு பழமை வாய்ந்த மருதூர் மேட்டுமருதூர் காட்டுவாரி பாலத்தின் வழியாக கூடலூர், மேலப் பணிக்கம்பட்டி பணிக்கம்பட்டி பாலம் இரணியமங்கலம் நடுப்பட்டி நல்லூர் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளுக்கு இந்த காட்டு வாரி பாலத்தின் வழியாகத்தான் தினமும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் விவசாயிகள் சென்றுவருகின்றனர்.

மேலும் விவசாயிகள் இடுபொருள்கள் ஏற்றி செல்வதற்கு இந்த காட்டு வாரி பாலத்தை தான் பயன்படுத்தி வருகின்றனர் இதன் வழியாக தான் தினந்தோறும் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மேட்டுமருதூர்- கூடலூர் வரை நகர பேருந்து வந்து செல்கிறது.

இந்த மேட்டுமருதூர் காட்டுவாரி பாலம் நூறாண்டு பழமை வாய்ந்த ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பாலம் என்பதால் மழைக்காலங்களில் உபரி நீர் அதிக அளவில் செல்லும் பொழுது ஆகாயத்தாமரை செடிகள் அடித்து செல்லும் தண்ணீரை தேக்கி விடுவதால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீரில் போக்குக்கு வழியில்லாமல் கடும் அவதிக்ள்ளாகினர்.

இதுகுறித்து விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கும் பலமுறை நூறாண்டு பழமை வாய்ந்த ஆங்கிலேயர் காலத்தில் கட்ட ப்பட்ட மேட்டுமருதூர் காட்டுவாரி பாலத்தை இடித்துவிட்டு புதிய அகலமான காட்டுவாரி பாலம் கட்டி தர வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியராக இருப்பவர்கள் சுற்றுப்பயணத்தின் போது வந்து பார்வையிட்டு இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறிச் சென்றனர். அதனைத் தொடர்ந்து மேலும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் கரூர் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வந்ததால் மேட்டுமருதூர் நூற்றாண்டு பழமை வாய்ந்த காட்டு வாரி பாலம் வலுவிழந்து மண் சரிவு ஏற்பட்டது.

தகவலறிந்த அதிகாரிகள் மணல் மூட்டை வைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் அந்த வழியாக இடுபொருள்கள் ஏற்றி செல்வதற்கோ மற்ற வாகனங்கள் செல்வதற்கோ அச்சத்துடன் கலந்து செல்ல வேண்டியஅவல நிலை உள்ளது.

அதனால் மாவட்ட நிர்வாகம் எவ்வித அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பு உடனடியாக நேரடி கள ஆய்வு மேற்கொண்டு நூறாண்டு பழமை வாய்ந்த ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த மேட்மருதூர் காட்டுவாரி பாலத்தை அகலப்படுத்தி புதுப்பித்து தர வேண்டுமென பொதுமக்கள் விவசாயிகள் கோரிக்கை வைத்திருந்தனர்.

இதுகுறித்த செய்தி தினகரன் நாளிதழில் கடந்த நவம்பர் மாதம் வெளியானது. செய்தியின் எதிரொலியாக மருதூர் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் பேரூராட்சி தலைவர் சகுந்தலா சுப்பிரமணியம் வேட்டு மருதூர் காட்டு வாரி பாலம் 1924ல் கட்டப்பட்டது கடந்த ஆண்டு ஏற்பட்ட புயலில் சேதமடைந்தது.

புதிதாக கட்டுவதற்கு பேரூராட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர். பின்னர் மண் பரிசோதனை, பாலம் கட்டும் வரைபடம் பொதுப்பணித்துறையில் இருந்து பேரூராட்சி கட்டுவதற்கு தலைமை சான்று பெறப்பட்டு திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம், சென்னையில் பேரூராட்சி இயக்குனரை நேரில் சந்தித்து தொடர்ந்து வலியுறுத்தினர்.இந்நிலையில் பேரூராட்சி நிர்வாகமும் தொடர்ந்து முயற்சி செய்து வந்தது தற்போது பாலம் கட்டுவதற்கு திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு மதிப்பீடு கூர்ந்த ஆய்வு செய்யும் பணி நடைபெற்றது.

அதற்காக ரூ 2 கோடியே 95 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு அரசாணை பெற்று பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் வாகன ஓட்டிகள் வசதிக்காக மாற்றுப்பதை அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

அதனால் இச்செய்தியை அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்ற தினகரன் நாளிதழுக்கும், நிதி ஒதுக்கீடு செய்த தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கும் நடவடிக்கை எடுத்தஎம்எல்ஏ செந்தில் பாலாஜி, எம்.எல்.ஏ. மாணிக்கம் பேரூராட்சி தலைவர் சகுந்தலா சுப்பிரமணியம் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்களுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Related Stories: