புதுச்சேரியில் நேற்று மாலை இன்டர்நெட் சேவை முடங்கியதால் சுற்றுலா பயணிகள் அவதி

புதுச்சேரி : புதுச்சேரிக்கு வாரந்தோறும் விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். அதன்படி புது்ச்சேரி சட்டமன்ற தேர்தலையொட்டி கடந்த 9ம் தேதி பொதுவிடுமுறை அளிக்கப்பட்டது.

இதற்காக வெளியூர்களில் பணிபுரிபவர்கள் ஓட்டுபோடுவதற்காக புதுவை வந்தனர். பிறகு தொடர்ந்து வாரவிடுமுறை வந்ததால் வெளியூர்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் புதுவையில் குவிந்தனர். இதனால் நேற்று மாலை கடற்கரையில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் திரண்டு கடலில் குளித்து மகிழ்ந்தனர்.

இந்நிலையில் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மக்கள் இணையதளத்தை பயன்படுத்தியதால் நேற்று மாலை இணையத்தள சேவை முடங்கியது. இதனால் நேற்று மாலை 6 மணி முதல் 7 மணி வரை அனைத்து நெட்வொர்க்கிலும் இன்டர்நெட் சேவை முடங்கியதால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.

வெளியூர்களில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் கூகுள்மேப் மற்றும் சுற்றுலா இடங்களை தேடுதல் உள்ளிட்டவற்றை பார்க்க முடியாமல் மிகவும் அவதியடைந்தனர். பிறகு 7 மணிக்கு மேல் இணையத்தள சேவை மீண்டும் இயங்கியதால் இயல்பு நிலை திரும்பியது.

Related Stories: