ஐக்கிய அரபு அமீரக அதிபருடன் ஜெய்சங்கர் சந்திப்பு

புதுடெல்லி: அமெரிக்கா-ஈரான் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு மத்தியில், வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் 2 நாள் பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நேற்று முன்தினம் சென்றார். அங்கு அவர் ஐக்கிய அரபு அமீரக அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்யானை சந்தித்து பேசி உள்ளார்.

அப்போது துபாய் பட்டத்து இளவரசரும், அமீரகத்தின் துணை பிரதமருமான ஹம்தான் பின் முகமது அல் மக்தூமும் உடனிருந்தார். இந்த சந்திப்பு குறித்து ஜெய்சங்கர் தனது சமூக ஊடக பதிவில், ‘‘மேற்கு ஆசியா போரின் போது, ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்களின் நல்வாழ்வை உறுதி செய்ததற்காக பிரதமர் மோடியின் நன்றியை தெரிவித்தேன். எங்கள் உரையாடல், பிராந்திய சூழல் மற்றும் அதன் தாக்கங்கள் குறித்து கவனம் செலுத்தியது’’ என்றார்.

Related Stories: