ஜம்மு: காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்கா ஜம்மு லோக் பவனில் நேற்று கூறுகையில் ‘‘ காஷ்மீரில் உள்ள அமர்நாத் புனித குகைக் கோயிலுக்கான வருடாந்திர புனித யாத்திரை ஜூலை 3 ம் தேதி தொடங்கி, 57 நாட்களுக்குப் பிறகு ஆகஸ்ட் 28 ம் தேதி நிறைவடையும்.
புனித யாத்திரைக்கான பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வரும் 15ம் தேதி இதற்கான முன் பதிவுகள் தொடங்கும். நாடு முழுவதும் உள்ள சுமார் 556 குறிப்பிட்ட வங்கிக் கிளைகள் மூலம் முன்பதிவு செய்யலாம். அமர்நாத் ஆலய வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாகவும் ஆன்லைனிலும் பதிவு செய்யலாம்’’ என்றார்.
