ஜனநாயகன் பட லீக்கிற்கு நாங்கள் காரணமல்ல: தணிக்கை வாரியம் விளக்கம்

டெல்லி: ஜனநாயகன் பட லீக்கிற்கு நாங்கள் காரணமல்ல என தணிக்கை வாரியம் விளக்கம் அளித்துள்ளது. நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன்’ திரைப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சென்சார் சான்றிதழ் பிரச்சனையால் படம் வெளியாகவில்லை. இந்நிலையில் தேர்தலுக்கு பின் படம் திரையரங்குகளில் வெளியாகும் என கூறப்பட்டது. இதனிடையே நேற்று ஜனநாயகன் படம் இணைய தளங்களில் கசிந்தது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். இதனை செய்தது தவெகவினர் தான் என்று சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சட்ட விரோதமாக படம் வெளியான நிலையில், திரைத்துறையினர் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், இது குறித்து ஒன்றிய தணிக்கை வாரியம் விளக்கம் அளித்துள்ளது. அதில் “ஜன நாயகன்” படம் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் மூலம் கசிந்துவிட்டதாக வெளியாகும் செய்திகள் அடிப்படையற்றதும் தவறானவையும் ஆகும். திரைப்பட சான்றிதழுக்காக சமர்ப்பிக்கப்படும் அனைத்து படங்களுக்கும் பாதுகாப்பான KDM முறையை சிபிஎப்சி பின்பற்றுகிறது. படத்திற்கான அணுகல் கடவுச்சொல் பாதுகாப்புடன் இருக்கும்; மேலும் கேடிஎம் முழுமையாக தயாரிப்பாளர்/இயக்குநரிடமே இருக்கும். சரியான கேடிஎம் இல்லாமல் அந்தப் படத்தை அணுகவோ அல்லது பார்க்கவோ முடியாது.

ஜனநாயகன் திரைப்படத்தின் டிஜிட்டல் சினிமா பேக்கேஜ் மார்ச் 17 அன்று மும்பையில் விண்ணப்பதாரரிடம் உரிய ஒப்புதல் பெற்று ஒப்படைக்கப்பட்டது; அதன் பின்னர் அது அவர்களிடமே உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: