பதவியை தவறாக பயன்படுத்தியதாக புகார் நேபாள அமைச்சர் தீப் குமார் ஷா பதவி பறிப்பு: பிரதமர் பாலேந்திர ஷா நடவடிக்கை

காத்மண்டு: நேபாள அமைச்சர் தீப் குமார் ஷா தனது பதவியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நேபாளத்தில் ஆளும் ராஷ்ட்ரிய சுதந்திர கட்சியின் தலைவர் பாலேந்திர ஷா பிரதமராக பதவி வகித்து வருகிறார். இவரது அமைச்சரவையில் தொழிலாளர், வேலை வாய்ப்பு மற்றும் சமூக பாதுகாப்புத்துறை அமைச்சராக தீப் குமார் ஷா பதவி வகித்து வந்தார்.

இந்நிலையில், “அமைச்சர் தீப் குமார் சா, தனது மனைவியின் வேலை வாய்ப்புக்காக தனது அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்துகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என ராஷ்ட்ரிய சுதந்திர கட்சியின் ரபி லாமிச்சனே பிரதமர் ஷாவுக்கு பரிந்துரைத்திருந்தார். அதனடிப்படையில் அமைச்சர் தீப் குமார் ஷாவை பதவி நீக்கம் செய்து பிரதமர் பாலேந்திரா ஷா நேற்று உத்தரவிட்டார். தற்போது டிப் குமார் ஷா வகித்து வந்த தொழிலாளர் அமைச்சக பொறுப்பையும் பிரதமர் ஷா ஏற்றுள்ளார்.

Related Stories: