சென்னை: இந்திய ஜனநாயக கட்சியின் பல்லாவரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் வழக்கறிஞர் வெங்கடேசன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். சென்னை பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழ்க்கட்டளை பகுதி 17 வது வார்டு மற்றும் பல்லாவரம் 14 15 16 வார்டுகளில் தேசிய ஜனநாயக கூட்டணியின் அதிமுக சார்பாக போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சியின் பல்லாவரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் வழக்கறிஞர் வெங்கடேசன் இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர் பிரச்சாரத்தின் போது அதிமுக பகுதி செயலாளர் ஜெயபிரகாஷ் வேட்பாளருக்கு வேல் வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தார்.
அவருடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தன்சிங் மற்றும் முன்னாள் நகர் மன்ற துணைத் தலைவர் பல்லாவரம் பகுதி கழக செயலாளர் ஜெயபிரகாஷ் மற்றும் கீழ்க்கட்டளை பகுதி கழக செயலாளர் சந்திரசேகர் ராஜா கலந்து கொண்டு வீடு வீடாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர் மேலும் இதில் இந்திய ஜனநாயக கட்சியில் பல்லாவரம் சட்டமன்ற தொகுதி மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட இந்திய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
