மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் ரூ.3,000 வழங்கப்படும்: தேர்தல் அறிக்கை வெளியீடு

 

மேற்குவங்கம்: மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் ரூ.3,000 வழங்கப்படும் என தேர்தல் அறிக்கை வெளியீடு. மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா. இலவசங்களை எதிர்ப்பதாக கூறி வரும் பாஜக, மேற்கு வங்கத்தில் மகளிருக்கு மாதம் ரூ.3,000 வழங்குவதாக வாக்குறுதி அளித்துள்ளது. மேற்கு வங்கத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 வழங்கப்படும். மேற்கு வங்கத்தில் மகளிர் தற்காப்புக்காக புதிய அமைப்பு, ஒரு கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய ஊடுருவல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். திரிணாமுல் காங்கிரஸின் 15 ஆண்டுகால ஊழலையும், சட்டம் ஒழுங்கு சீர்குலைவையும் அம்பலப்படுத்தும் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். சிண்டிகேட் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தல், “கமிஷன் பணம்” வாங்கும் கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்துதல் அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை உறுதி செய்தல், 7வது ஊதியக் குழுவை அமல்படுத்துதல்

ஐந்து ஆண்டுகளில் ஒரு கோடி புதிய வேலைவாய்ப்புகள் மற்றும் சுயதொழில் வாய்ப்புகள், ஒவ்வொரு வேலையில்லாத இளைஞருக்கும் ரூ.3,000 நிதியுதவி வழங்கப்படும். பெண்களுக்கான பிரத்யேக காவல் பட்டாலியன்கள், துர்கா சுரோகா படைகள், அரசு வேலைகளில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு ஆகியவற்றின் மூலம் பெண்களின் பாதுகாப்பு மற்றும் அதிகாரமளித்தல், பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.3,000 நிதியுதவி வழங்கப்படும். இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் குர்மாலி மற்றும் ராஜ்போங்ஷி மொழிகளைச் சேர்த்தல்.

நெல், உருளைக்கிழங்கு மற்றும் மாம்பழ சாகுபடிக்கு ஆதரவு அளிக்கப்படும், பிரதம மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனாவின் கீழ் அனைத்து மீனவர்களையும் பதிவு செய்தல். பொருளாதாரத்தை மேம்படுத்த மேற்கு வங்கத்தை ஒரு முன்னணி தொழில் மற்றும் மீன் ஏற்றுமதி மையமாக மாற்றுதல், சீரான சிவில் சட்டத்தை அமல்படுத்த சட்டம் இயற்றுதல், கால்நடை கடத்தலைத் தடுக்க கடுமையான சட்டம் வகுக்கப்படும்.

பழைய தேயிலைத் தோட்டங்களுக்கு புத்துயிர் அளித்தல், டார்ஜிலிங் தேயிலையின் வர்த்தக முத்திரையை வலுப்படுத்துதல் மற்றும் சணல் தொழிலை நவீனமயமாக்குதல் அனைத்து மத்திய அரசு திட்டங்களுடன் ஆயுஷ்மான் பாரத் யோஜனாவை செயல்படுத்துதல், இலவச HPV தடுப்பூசி, மார்பகப் புற்றுநோய் பரிசோதனை, மற்றும் வட வங்கத்தில் AIIMS, IIT மற்றும் IIM ஆகியவற்றை அமைத்தல், வந்தே மாதரம் அருங்காட்சியகம் ஒன்றை நிறுவுதல் மத வழிபாடுகளின் சுதந்திரத்தை உறுதி செய்யும் சட்டத்தை இயற்றுதல் ஆகியவை தேர்தல் வாக்குறுதிகளாக கொடுத்துள்ளது.

 

Related Stories: