சிவகங்கை: சிவகங்கை மாவட்ட எல்லையில் தவெக தலைவர் விஜயின் பரப்புரை வாகனத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒருசில நாட்களே இருக்கும் நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் காரைக்குடியில் உள்ள கண்ணதாசன் மணிமண்டபம் முன்பு, தேவர் சிலை அருகிலுள்ள நான்கு சாலை சந்திப்பு பகுதியில் நடைபெற உள்ளது.பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சீரமைப்பை கருத்தில் கொண்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
விஜய் எந்த வழியாக வருகிறாரோ அதே வழியாகவே திரும்பிச் செல்ல வேண்டும், பரப்புரையை 12 முதல் 2.30 மணிக்குள் நிறைவு செய்ய வேண்டும், ஒலிப்பெருக்கி பயன்படுத்த கூடாது, பிரச்சாரத்தின் போது 20 மருத்துவர்கள் கொண்ட அவசர சிகிச்சை குழு கட்டாயமாக இருக்க வேண்டும், 200 வாலண்டியர்கள் வாக்கி-டாக்கி வசதியுடன் பணியில் ஈடுபட வேண்டும், இருசக்கர வாகனங்களில் விஜய் பிரச்சார வாகனத்தை பின்தொடரக் கூடாது, வாகன நிறுத்தத்திற்காக 5 கார் பார்கிங் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
18 வயதிற்குட்பட்டவர்கள் பரப்புரையில் கலந்துகொள்ள கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் இருக்க வேண்டும். சுட்டுப்போட்டாலும் சில விஷயங்களுக்கு செட் ஆகாது. அதுபோலத்தான் விஜய்யும்-தேர்தல் பிரச்சாரங்களும் இருப்பதாக அரசியல் விமர்சர்கள் கூறுகின்றனர். ஏனெனில் இவர் பிரச்சாரத்திற்கு போகும் இடங்களில், இவரை பின்தொடரும் ரசிகர்களால் விபத்துக்கள் ஏற்படுகின்றன. மதுரை அருகே திருமங்கலம் பகுதியில் விஜய் சென்ற வாகனத்தை பின் தொடர்ந்த ரசிகர்கள் இருவர் விபத்தில் சிக்கினார். இந்த பரப்புரையில் கலந்துகொள்வதற்காக சென்னையில் இருந்து தனி விமானத்தில் காலை 9.30 மணி அளவில் தவெக தலைவர் விஜய் மதுரை புறப்பட்டார்.
மதுரையில் இருந்து சாலை மார்க்கமாக பரப்புரை நடைபெறும் காரைக்குடி வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் தான் விஜய் வாகனத்தை பின்தொடர்ந்து வந்த இருவர் விபத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். விஜய் வாகனத்தை பின்தொடர்ந்து வந்த தவெக தொண்டர்கள் படுகாயம் அடைந்துள்ளார். இதைத்தொடர்ந்து, சிவகங்கை மாவட்ட எல்லையில் தவெக தலைவர் விஜயின் பரப்புரை வாகனத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். காரைக்குடி செல்லும் வழியில் திருப்பத்தூர் அருகே எஸ்.எஸ்.கோட்டையில் வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர்.
