மரக்காணம்: மரக்காணம் அருகே குரும்புரம் கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 65 வயது பெண் உயிரிழந்தார். நேற்றிரவு மீன் குழம்பு சாப்பிட்ட பிறகு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளதாக விசாரணையில் தகவல் தெரிவித்துள்ளார். எனினும் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகே காரணம் தெரியவரும் என போலீசார் தகவல்.
