×

பர்கூர் மலை கிராமத்தில் காட்டுப்பன்றி தாக்கி மூதாட்டி படுகாயம்

அந்தியூர்,ஏப்.10: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் மலைப்பகுதி வெள்ளிமலை கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் தொட்டமாதி(65). இவர் தனது வீட்டுக்கு அருகில் நேற்று முன்தி மாலை ஆடு மேய்த்தார். அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த காட்டுப்பன்றி ஒன்று அவரை முட்டி கீழே தள்ளிவிட்டு ஓடிவிட்டது.

இதில் தொட்டமாதியின் இடது கால் முறிவு ஏற்பட்டு அலறி துடித்துள்ளார். தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் மூதாட்டியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், தொடர்ந்து அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

 

Tags : Burghur ,Antyur ,Dottamadi ,Velhimali ,Burkur ,Erode district ,Anthiur ,
× RELATED வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு; மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி