நெல்லை: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட 38 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் வேட்பு மனு பரிசீலனையின் போது 32 நபர்களின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், மீதமுள்ள 6 பேர் வேட்பாளராக இருந்த நிலையில் நேற்று வேட்பு மனு வாபஸ் வாங்க இறுதி நாளில் சுயேச்சை வேட்பாளரான மணிமுத்தாறு ஆலடியூர் பகுதியைச் சேர்ந்த சுப்பையா வேட்பு மனுவினை திரும்ப பெற்றார். இதனையடுத்து அம்பாசமுத்திரம் தொகுதியில் இறுதி வேட்பாளர்களாக அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா, காங்கிரஸ் சார்பில் வி.பி.துரை, தவெக ராஜகோபால், நாம் தமிழர் கட்சி சிவசங்கரன், பகுஜன் சமாஜ் கட்சி இசைகண்ணன் ஆகிய 5 பேர் மட்டுமே உள்ளனர். தமிழ்நாடு தேர்தல் களத்தில் குறைவான வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியாக அம்பாசமுத்திரம் மாறியுள்ளது.
