தேர்தல் நாளில் விடுமுறை வழங்காத நிறுவனங்களின் மீது புகார் அளிக்க கட்டுப்பாட்டு அறைகள் அமைப்பு

காஞ்சிபுரம், ஏப்.9: தொழிலாளர் துறை சார்பில், தேர்தல் நாளில் விடுப்பு வழங்காத நிறுவனங்களின் மீது புகார் அளிப்பதற்காக மாநில, மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு உள்ளது என்று தேர்தல் அலுவலர் சினேகா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வரும் 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவுக்காக அன்றைய தினம் அனைத்து நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டுமென தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், தேர்தல் நாளில் விடுப்பு வழங்காத நிறுவனங்களின் மீது புகார் அளிப்பதற்காக மாநில, மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான தி.சினேகா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2026ம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தல் அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் முறையே (9ம் தேதி) இன்று, 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. எனவே, காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், கடைகள் மற்றும் உணவு நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் பணிபுரியும் நிரந்தர ஒப்பந்த மற்றும் தற்காலிக தொழிலாளர்கள் வாக்களிக்க ஏதுவாக, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் தேர்தல் நாட்களில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும்.

அவ்வாறு விடுப்பு வழங்காத நிறுவனங்களின் மீது புகார் பெறப்பட்டு, நடவடிக்கை எடுக்க ஏதுவாக தொழிலாளர் துறை சார்பில் மாநில மற்றும் மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நாளன்று வாக்களிக்கும் வகையில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, புகார் தெரிவிக்க மாநில அளவில் தொழிலாளர் துறை தொடர்பான தேர்தல் கட்டுப்பாட்டு அறை அலுவலர் எல்.ரமேஷை (தொழிலாளர் இணை ஆணையர்) 7904646090 என்ற எண்ணிலும், உறுப்பினர்களான தொழிலாளர் உதவி ஆணையர்கள் பெ.ஷோபனாவை 7299007334 என்ற எண்ணிலும், கி.பழனியை 7904802429 என்ற எண்ணிலும், எஸ்.சிவகுமாரை 9043555123 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளர் துறையின் மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை அலுவலர் ச.சுதாவை (தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்), காஞ்சிபுரம் 9442832516 என்ற எண்ணிலும், ஆ.உமாசங்கரை (தொழிலாளர் துணை ஆய்வர்) 8667518400 என்ற எண்ணிலும், எஸ்.சங்கரை (தொழிலாளர் துணை ஆய்வர், பரங்கிமலை) 9940539343 என்ற எண்ணிலும் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் கூறியுள்ளார்.

Related Stories: