‘‘நான் ஒரு விவசாயி. ஒரு விவசாயியின் கஷ்டம் மற்றொரு விவசாயிக்கு தான் ெதரியும். ஒரு விவசாயி தமிழகத்தை ஆட்சி செய்வது எனக்கு மட்டுமல்ல. உங்களுக்கும் பெருமை. பரபரப்பான அரசியல் பணிகளுக்கு மத்தியிலும் முழுமையான விவசாயியாகவும் வாழ்ந்து வருகிறேன். ஒரு சிலரை போல் ஒப்புக்கு விவசாயி என்று கூறமாட்டேன். உண்மையிலேயே நான் விவசாயி. எனது தோட்டத்தில் நெல், கரும்பு எல்லாம் பயிரிடுகிறேன்,’’ என்பதெல்லாம் அதிமுக பொதுச்ெசயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு கூட்டத்திலும், பேட்டியிலும் உதிர்க்கும் முத்தான வார்த்தைகள். இப்படிப்பட்ட நிலையில், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில் தனது பெயரில் விவசாய நிலமே இல்லை என்று தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இடைப்பாடி தொகுதியில் 8வது முறையாக போட்டியிடும் அதிமுக பொதுச்ெசயலாளர் எடப்பாடி பழனிசாமி, நேற்று முன்தினம், தனது வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் நடராஜனிடம் சமர்ப்பித்தார். இதில் அவரது சொத்துவிபரம் மற்றும் குற்றவழக்குகள் தொடர்பான தகவல்களை தெரிவித்துள்ளார். சொத்துக்களை பொறுத்தவரை அசையும் சொத்தாக எடப்பாடி பழனிசாமிக்கு ரூ.50.86 லட்சமும், மனைவி ராதாவுக்கு ரூ.2.16 கோடியும், குடும்பத்தின் பெயரில் ரூ.49.24 லட்சமும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதில் அசையா சொத்துகளை பொறுத்தவரை தன் பெயரில் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார். அதாவது ஒட்டுமொத்த விவசாயிகளின் பிரதிநிதி என்று கூறிக்கொண்டு, பச்சை துண்டை போட்டுக் கொண்டு எடப்பாடி பழனிசாமி வலம் வருகிறார். ஆனால் இப்படிப்பட்ட விவசாயியின் பெயரில் வேளாண்நிலமே இல்லை என்பது கேலிக்கூத்தானது.
இது ஒரு புறமிருக்க, அவரது மனைவி ராதா பெயரில் இடைப்பாடி, திருச்செங்கோடு, ஈரோடு பகுதிகளில் வேளாண்நிலங்கள் இருப்பதாக ெதரிவித்துள்ளார் இந்த விவசாயி. இதனால் தனது பெயரில் நிலமே இல்லாத விவசாயி என்று அவரை ஹேஸ்ேடக் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள். இது ஒரு புறமிருக்க, விவசாயி என்று அடித்து விடுவதெல்லாம் நடிப்பா கோபால் என்றும் சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர். இன்னும் பலர், ஒரு விவாசயி நிலமே இல்லாமல் ஒருவேளை வீட்டிலேயே விவசாயம் செய்கிறாரா என கமென்ட் அடித்து
வருகின்றனர்.
