×

10ம் வகுப்பு தேர்வுகள் நிறைவு

சென்னை: தமிழகத்தில் பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு மார்ச் 11ம் தேதி தொடங்கியது. மொத்தம் 8 லட்சத்து 82 ஆயிரத்து 806 பேர் மற்றும் தனித் தேர்வர்கள் 26 ஆயிரத்து 196 என மொத்தம் 9 லட்சத்து 9 ஆயிரம் பேர் எழுதினர்.
தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வுகள் ஏப்ரல் 2ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் விருப்ப மொழிப்பாடங்களுக்கான தேர்வு நேற்று நடந்தது. இதையடுத்து, நேற்றுடன் பத்தாம் வகுப்பு தேர்வுகள் நிறைவு பெற்றன. தேர்வுத்துறை ஏற்கனவே அறிவித்தபடி விடைத்தாள் திருத்தும் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. மே 20ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடவும் தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.

Tags : Chennai ,Tamil Nadu ,
× RELATED கோடைக்காலம் தொடங்கி உள்ளதால்...