சென்னை: அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு தேர்வுத்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியை குளறுபடிகள் இல்லாமலும், தொய்வின்றி முடிக்கத் தேவைப்படும் ஆசிரியர்களின் எண்ணிக்கையை பாட வாரியாகவும், பயிற்று மொழி வ ாரியாகவும் சரியாக கணக்கிட வேண்டும். தகுதியான ஆசிரியர்களை உடனடியாக பணியில் இருந்து விடுவித்து மதிப்பீட்டு முகாம் பணிக்கு மாற்ற வேண்டும்.
தமிழ் வழியில் பாடம் நடத்தும் ஆசிரியர்கள் தமிழ் வழியில் உள்ள விடைத்தாள்களையும், ஆங்கில வழியில் பாடம் நடத்தும் ஆசிரியர்கள் ஆங்கில வழி விடைத்தாள்களையும் மட்டுமே திருத்த வேண்டும். அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் என அனைத்து வகை பள்ளிகளில் இருந்தும் தகுதியான ஆசிரியர்களை பணியில் இ ருந்து விடுவித்து அவர்களை தேர்வாளர்களாக நியமிக்க வேண்டும்.
எந்தவொரு பள்ளியில் இருந்தும ஆசிரியர்கள் விடுபடாமல் இருப்பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். விடைத்தாள் திருத்தும் பணிக்கு நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 9ம் தேதிக்குள் பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும்.
