விஜய்யை விமர்சிக்க மாட்டேன்: கணவனை போல் குஷ்புவும் ‘ஜகா’

நடிகை குஷ்பு கூறுகையில், ‘‘எனது அரசியல் வாழ்க்கையில் என் கணவர் பின்புலமாக இருந்தார். அவர் தற்போது நேரடி அரசியலில் களம் காண்கிறார். அவருக்கு என்னுடைய அறிவுரை தேவையில்லை. தேர்தல் களத்தில் போட்டி இருக்க வேண்டியது அவசியம். வெற்றி சுலபமாக கிடைத்தால் அதனை ரசிக்க முடியாது.

மக்கள் நல்லது செய்வோருக்கு தான் ஆதரவாக இருப்பார்கள். பாரம்பரிய அரசியல்வாதி என்பதற்காகவும், குடும்ப அரசியல்வாதி என்பதற்காகவும் மக்கள் வாக்களிக்கும் காலம் போய்விட்டது. அண்ணாமலை போட்டியிடாதது குறித்து நான் கருத்து தெரிவிக்க முடியாது, அது மேலிட உத்தரவு, அதுகுறித்து அவர் தான் பேசவேண்டும்.

தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் திமுக இடையே தான் போட்டி. விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளேன். அவர் குறித்து மே 4க்கு பிறகு பேசலாம். அரசியல் களத்தில் விஜய்யை விமர்சிக்க மாட்டேன்’’ என்றார். குஷ்புவை அக்கானு விஜய் கூப்பிடுவதால் விமர்சிக்க மாட்டேன் என்று சுந்தர்.சி தெரிவித்திருந்தார். தற்போது, குஷ்புவும் விஜய்யை விமர்சிக்க மாட்டேன் என தெரிவித்து உள்ளார்.

Related Stories: