சென்னை: திருவள்ளூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் வி.ஜி.ராஜேந்திரனை ஆதரித்து, பேரம்பாக்கம் பகுதியில் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா பரப்புரையில் ஈடுபட்டு, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது: ரூ.8 ஆயிரம் கூப்பன் சரிசமமாக அனைவருக்கும் வழங்கப்படும்.
பெண்களுக்கு ரூ.2 ஆயிரம் சரிசமமாக வழங்கப்படும். திமுக ஆட்சிக்கு வந்தால் பால், மின், பேருந்து கட்டணங்கள் உயராது. எதிர்கட்சிக்கு ஓட்டு போட்டால் பிரிட்ஜ் தருவோம் என்கின்றனர். யார் வீட்டில் பிரிட்ஜ் இல்லை. எனவே, நீங்கள் அனைவரும் உதய சூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
