மோசடி வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை ம.பி. காங். எம்எல்ஏ தகுதி நீக்கம்

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் மோசடி வழக்கில் தண்டனை பெற்றதை அடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜேந்திர பாரதி, பதவி பறிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் தாதியா சட்டமன்ற தொகுதியில் கடந்த 2023ம் ஆண்டு நடந்த தேர்தலில் மத்தியப்பிரதேச முன்னாள் உள்துறை அமைச்சரும் பாஜ தலைவருமான நரோத்தம் மிஸ்ராவை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜேந்திர பாரதி.

இந்நிலையில் மாவட்ட கூட்டுறவு விவசாய நில மேம்பாட்டு வங்கியின் தலைவராக கடந்த 1998ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜேந்திர பாரதி (65) பதவி வகித்தார். அப்போது தனது அதிகாரத்தை பயன்படுத்தி, வங்கி ஆவணங்களை திருத்தி மோசடி செய்ததாக அவர் மீது புகார் எழுந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.

இந்த வழக்கில் ராஜேந்திர பாரதி மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதை அடுத்து ராஜேந்திர பாரதிக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில் சட்டப்பேரவை முதன்மை செயலாளர் அரவிந்த் சர்மா ராஜேந்திர பாரத் எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதாக நேற்று முன்தினம் அறிவித்தார்.

Related Stories: