திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று வரை 71 பேர் மனு தாக்கல்

திருவள்ளூர், ஏப்.3: தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகின்ற 23ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் நேற்று வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதில் கும்மிடிப்பூண்டியில் 8 பேரும், பொன்னேரியில் 4 பேரும், திருத்தணி 5 பேரும், திருவள்ளூர், பூந்தமல்லி தலா ஒருவரும், ஆவடியில் 4 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். மேலும், மதுரவாயல் 7 பேர், அம்பத்தூர் 6 பேர், மாதவரம் 5 பேர், திருவெற்றியூர் 5 பேர் என திருவள்ளூர் மாவட்டத்தில் 46 பேர் உட்பட நேற்றுவரை மொத்தம் 71 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: