மதுரை: சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் 9 குற்றவாளிகளுக்கும் தண்டனை அறிவிப்பு வரும் 6ம் தேதிக்கு ஒத்திவைத்து மதுரை கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என சிபிஐயும், குறைந்தபட்ச தண்டனை வேண்டும் என குற்றவாளிகள் தரப்பிலும் இன்று நீதிபதியிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது
