ஓமலூர், ஏப்.2: ஓமலூர் சட்டமன்ற தொகுதியில், வாக்காளர்களுக்கு மதுபாட்டில்கள் விநியோகிக்கப் படுவதாக கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து, தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். ஓமலூர் அடுத்த அடைக்கனூர் பகுதியில் உள்ள பானுபிரியா என்பவரது வீட்டில் நடத்திய சோதனையில், பதுக்கி வைக்கப்பட்டிருந்த 107 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த மதுபாட்டில்கள் இரும்பாலை மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன. பின்னர், வழக்குபதிவு செய்து பானுபிரியாவை கைது செய்த போலீசார், பிணையில் விடுவித்தனர். தேர்தல் நெருங்குவதையொட்டி, சட்ட விரோத மது விற்பனையை தடுக்க சந்து கடைகளை தீவிரமாக கண்காணித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
