கழகத்தின் முன்னோடி கே.சி.பழனிசாமியிடம் கருப்பு, சிவப்பின் கம்பீரம் குறையவில்லை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: “கரூர் மாவட்டக் கழகத்தின் முன்னோடியும் கழக உயர்நிலைச் செயல்திட்டக் குழு உறுப்பினருமான அண்ணன் கே.சி. பழனிசாமியை நேரில் சந்தித்து நலம் விசாரித்து, தேர்தல் குறித்த அவரது ஆலோசனைகளைப் பெற்றேன்.91 வயதானாலும், உடலில்தான் தளர்வைக் காணமுடிகிறதே தவிர, அவரது உள்ளம் உறுதியாக இருக்கிறது. கருப்பு சிவப்பின் கம்பீரம் குறையவில்லை! கொள்கைப் பற்றுமிக்க மூத்தோரின் வாழ்த்துகளோடு வெல்வோம் ஒன்றாக!” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்

Related Stories: