அரியலூர்,ஏப்.1: அரியலூர் அருகே உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்துச் சென்ற ரூ.86 ஆயிரம் நேற்று முன்தினம் இரவு பறிமுதல் செய்யப்பட்டது. அரியலூர் – செந்துறை புறவழிச்சாலையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் மணிகண்டன் தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் இரவு 12.30 மணியளவில் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவர்கள் அந்த வழியாக வந்த காரை மறித்து விசாரணை மற்றும் சோதனை மேற்கொண்டதில், அரியலூர் அருகேயுள்ள புதுப்பாளையத்தைச் சேர்ந்த ராம்குமார் என்பவர், ரூ.86 ஆயிரம் கொண்டு சென்றதும், அவை நகை விற்ற பணம் என்பது தெரியவந்தது. இருப்பினும் அந்த பணத்துக்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அதனை தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் பறிமுதல் செய்து, தேர்தல் நடத்தும் அலுவலர் பிரேமியிடம் ஒப்படைத்தனர்.
