×

பாஜ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அசாமில் 3 மாதங்களுக்குள் பொதுசிவில் சட்டம் அமல்: முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா உறுதி

கவுகாத்தி: அசாமில் பாஜ மீண்டும் ஆட்சிக்கு வந்த மூன்று மாதங்களுக்குள், பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார். அசாம் சட்டமன்றத் தேர்தலுக்கான பாஜவின் தேர்தல் அறிக்கையை வெளியிடும் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியதாவது: அசாமில் பாஜ மீண்டும் ஆட்சிக்கு வந்த மூன்று மாதங்களுக்குள், பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும். நாங்கள் ‘லவ் ஜிஹாத்’ மற்றும் ‘நில ஜிஹாத்’ ஆகியவற்றிற்கு எதிராகக் கடுமையான சட்டங்களையும் கொண்டு வரவுள்ளோம்.

மேலும், சட்டவிரோத குடியேறிகள் வெளியேற்றச் சட்டம், 1950’-ஐ அமல்படுத்தும் அதிகாரத்தை மாநிலத்தின் மாவட்ட ஆணையர்களுக்கு வழங்கவுள்ளோம்; இதன் மூலம், வெளிநாட்டினரை 24 மணி நேரத்திற்குள் வெளியேற்றும் அதிகாரம் அவர்களுக்கு வழங்கப்படும். வங்கதேசம் இருக்கும் வரை, ஊடுருவல்காரர்கள் வந்துகொண்டே இருப்பார்கள்; நாமும் அவர்களுடன் போராடிக்கொண்டே இருக்க வேண்டும். ஊடுருவல்காரர்களைத் திருப்பி அனுப்புவது என்பது ஒரு கட்டிடத்தைக் கட்டுவது போன்றதல்ல; அதற்கு ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவை நம்மால் நிர்ணயிக்க முடியாது. இவ்வாறு கூறினார்.

Tags : Assam ,BJP ,Chief Minister ,Himanta Biswa Sarma ,Guwahati ,Assam Assembly elections ,Himanta Biswa… ,
× RELATED ரயில் டிக்கெட்டை ரத்து செய்வதற்கான புதிய விதிமுறைகள் இன்று முதல் அமல்!!