மாணவி கொலை வழக்கு 20 நாளில் போலீஸ் குற்றப்பத்திரிகை தாக்கல்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், வேடநத்தம் பகுதியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி கடந்த மாதம் 10ம் தேதி இரவு மாயமானார். 11ம் தேதி மாலை அங்குள்ள காட்டுப்பகுதியில் மாணவி கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார். போலீசாரின் தொடர் விசாரணையில் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை சேர்ந்த முனியசாமி மகன் தர்மமுனீஸ்வரன் (37) என்பவர், மாணவியை கொலை செய்தது சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் தெரியவந்தது. இதையடுத்து குளத்தூர் போலீசார் அவரை கைது செய்தனர். மாணவியின் நகங்களுக்குள் இருந்த ரத்த மாதிரியும், தர்மமுனீஸ்வரன் ரத்த மாதிரியும் ஒன்றுதான் என்பது டிஎன்ஏ டெஸ்ட்டில் உறுதியானது. இதை தொடர்ந்து சம்பவம் நடந்த 20 நாட்களில் போலீசார் நேற்று தர்மமுனீஸ்வரன் மீது விளாத்திகுளம் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணை விரைவாக நடத்தப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது.

Related Stories: