30,35 ஆண்டுகளுக்குப் பிறகு அரியலூர், ஏற்காட்டில் முதன்முறையாக திமுக சார்பில் பெண் வேட்பாளர்

 

அரியலூர் சட்டப்பேரவை தொகுதி 1957 முதல் 1980 வரை காங்கிரஸ், திமுக கோட்டையாக இருந்து வந்தது. அரியலூர் தொகுதி தொடங்கப்பட்ட காலத்திலிருந்து 2021ல் நடந்த தேர்தல் வரை திமுக சார்பில் பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டது இல்லை. திமுக கூட்டணி சார்பிலும் இதுவரை பெண் வேட்பாளர்கள் போட்டியிடவில்லை. இந்நிலையில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் முதன்முறையாக பெண் வேட்பாளரை திமுக களமிறக்கி உள்ளது. கட்சியின் மாவட்ட துணை செயலாளர் லதா பாலு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஏற்காடு தமிழகத்தில் பழங்குடியினருக்கான தனித்தொகுதிகளாக சேலம் மாவட்டம் ஏற்காடு தொகுதியும், நாமக்கல் மாவட்டத்தில் சேந்தமங்கலம் தொகுதியும் உள்ளன.

இதில், ஏற்காடு தமிழகத்தின் மிகச் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. கடந்த 1957ம் ஆண்டு முதல், ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் நடந்து வரும் நிலையில், காங்கிரஸ், திமுக, அதிமுக என 3 கட்சிகளும் மாறி, மாறி வெற்றி பெற்று தங்களது இருப்பை நிரூபித்துள்ளன. தற்போது நடைபெறவுள்ள தேர்தலில் அதிமுக சார்பில், உஷாராணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். திமுக சார்பில் கடந்த 1991ம் ஆண்டுக்குப்பிறகு, சுமார் 35 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான், திமுக சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளராக ரேவதி மாதேஸ்வரன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் கிழக்கு மாவட்ட திமுக மகளிரணி துணை
அமைப்பாளராக உள்ளார்.

 

Related Stories: