கரூர் மாவட்டத்தில் நீர் நிலைகளில் மண்டிக்கிடக்கும் புதர்கள்

*நீரோட்டம் பாதிப்பு

கரூர் : கரூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள நீர் நிலைகளில் முட்புதர்களால் நீரோட்டம் பாதிக்கிறது.உலகம் முழுவதும் உள்ள ஒரு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய துறைகளில் பொதுப்பணித்துறை முக்கியமானதாகும். பொதுப்பணித்துறை சார்பில் அரசு கட்டடங்கள், பாலங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை வடிவமைத்தல், கட்டுதல் மற்றும் பராமரித்தல் போன்ற முக்கிய பணிகளை மேற்கொள்கிறது.

நீர்வள ஆதாரங்களை நிர்வகித்தல், நீர் வழிப்பாதைகளை மேம்படுத்துதல், அரசு அலுவலகங்கள் மற்றும் குடியிருப்புகளைப் பழுதுபார்த்தல் மற்றும் கட்டட உறுதித்தன்மைசான்றிதழ் வழங்குகிறது. அரசு துறைகளுக்குத் தேவையான அலுவலகங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான குடியிருப்புகளைக் கட்டுதல்.

பராமரிப்பு மற்றும் பழுதுபார்த்தல்:

தற்போதுள்ள அரசு கட்டடங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளைப் பழுதுபார்த்தல் மற்றும் முறையான பராமரித்தல். பாசன அமைப்புகளை மேம்படுத்துதல், ஏரி, குளங்களைச் சீரமைத்தல் மற்றும் நீர் வழித்தடங்களைப் பராமரித்தல்.

கட்டட உறுதித்தன்மை: புதிய கட்டடங்களின் வரைபடங்களை வடிவமைத்தல் மற்றும் கட்டட உறுதித்தன்மைச் சான்றிதழ் வழங்குகிறது. வரலாற்று சிறப்புமிக்க அரசுக் கட்டடங்களைப் பாதுகாத்தல்.

இத்துறை அரசின் பல்வேறு கட்டுமானத் திட்டங்களை, பொறியியல் தொழில்நுட்பத்துடன், அரசு நிதியைக் கொண்டு மேற்கண்ட பணிகளை பொதுப்பணித்துறை செயல்படுத்தி வருகிறது.
கரூர் மாவட்டத்தில் கரூர் மாநகராட்சி, குளித்தலை, புகழூர், பள்ளப்பட்டி என முக்கிய நகராட்சிகள் உள்ளன. மாவட்டத்தில் 156 கிராம பஞ்சாயத்துகளும் கரூர், தான்தோன்றி மலை, அரவக்குறிச்சி, க.பரமத்தி, கடவூர், தோகைமலை, குளித்தலை மற்றும் கிருஷ்ணராயபுரம் உள்பட 8 ஒன்றியங்கள் உள்ளன.

இப்போது சுமார் 9,200க்கும் அதிகமான நீர் நிலையில் உள்ளன. தற்போது கோடைகாலம் என்பதால் அனைத்து நீர்நிலைகள் தண்ணீர்ந்து வறண்டு காணப்படுகிறது. கரூர் மாவட்டத்தில் பஞ்சப்பட்டி, வெள்ளியணை, ஜெகதாவி, தாதம்பாளையம் முக்கிய ஏரிக்ளாகும். கடவூர் ஒன்றியத்தில் அதிகப்படியாக சுமார் மூவாயிரத்துக்கும் அதிகமான சிறிய நீர்நிலைகள் உள்ளன.

மேலும் கிருஷ்ணராயபுரம், தான்தோன்றிமலை, அரவக்குறிச்சி ஆகிய ஒன்றிய பகுதிகளில் ஏராளமான நீர் நிலைகள் உள்ளன. தற்போது மழை இல்லாமல் வறட்சி காலம் என்பதால் நீர் நிலைகள் தற்போது வறண்டு காணப்படுவதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முறையாக தண்ணீர் வருவதற்கு வசதியாக நீர் நிலைகளை ஆழப்படுத்தி நீர் ஓடைகளை சரி செய்ய வேண்டும்.

மேலும் நீர் நிலைகளில் மண்டிக்கிடக்கும் சீமை கருவேல மரங்கள், பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கிக்கிடக்கின்றன. இதனை கருத்தில் கொண்டு பொதுப்பணித்துறை அதிகாரிகள் கரூர் மாவட்ட முழுவதும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள குளங்களை இனம் கண்டு ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தி மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக நீர்நிலைகள் மற்றும் குளங்களை பாதுகாக்கவேண்டும்.

Related Stories: