சேலம்: கோவை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார், தாறுமாறாகச் சென்று இரு சக்கர வாகனங்கள் மீது மோதி விபத்துகுள்ளானது. காரில் இருந்த 74 வயது மூதாட்டி மற்றும் ஸ்கூட்டரில் சென்ற பாஸ்கரன் (60) இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். கார் ஓட்டுநர் உள்பட நால்வர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
