புதுடெல்லி: மாநிலங்களவை சுயேச்சை எம்பி கபில் சிபல் நேற்று கூறியதாவது:நெருக்கடி ஏற்படும் போது பிரதமர் மோடி டீம் இந்தியாவை நினைவு கூர்கிறார்கள். ஆனால் மற்ற நேரங்களில் அது பற்றி சிந்திப்பது இல்லை. அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் மோதலால் யார் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர், யார் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்ற கேள்வியை எனக்குள் கேட்டுக்கொண்டேன். அதில் இந்தியாதான் என்ற முடிவுக்கு வந்தேன். இந்தியா, தனது கச்சா எண்ணெயில் சுமார் 88.6 % இறக்குமதி செய்கிறது. சீனாவும் அதிக அளவில் இறக்குமதி செய்கிறது.
ஆனால் அவர்கள் அதை மற்ற இடங்களிலிருந்து பெறுகிறார்கள். இந்தியா 50 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது. அதில் 30 லட்சம் பேரல் மத்திய கிழக்கிலிருந்து வருகிறது. ஒரு பேரலின் விலை 160 அமெரிக்க டாலராக இருப்பதால், இதற்காக 60 % கூடுதலாகச் செலுத்த வேண்டியுள்ளது. இந்தியாவிடம் ஏழு முதல் எட்டு நாட்களுக்கு மட்டுமே போதுமான கையிருப்பு உள்ளது.சீனாவிடம் 120 நாட்கள், ஜப்பானிடம் 208 நாட்கள், தென் கொரியாவிடம் 200 நாட்களுக்கும் தேவையான கையிருப்பு உள்ளது என்றார்.
அசாம், புதுச்சேரி பா.ஜ பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பிரதமர் மோடி நாளை பேச்சு
அசாம் மற்றும் புதுச்சேரிக்கு ஏப்.9 அன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அங்குள்ள பா.ஜ பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பிரதமர் மோடி நாளை காணொலி காட்சி மூலம் உரையாட உள்ளார். இதுபற்றி பிரதமர் மோடி கூறுகையில்,’அசாம் மற்றும் புதுச்சேரி மக்கள் இந்த முறையும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு ஆதரவாகத்தான் வாக்களிப்பார்கள். இரட்டை என்ஜின்’ கொண்ட ஆட்சியைப் பெற மக்கள் அனைவரும் தயாராக உள்ளனர். நாளை பிற்பகல் பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் நான் காணொலி மூலம் பேச உள்ளேன்’ என்றார்.
