×

ஜெயலலிதாவின் ஸ்ரீரங்கம் தொகுதியில் மாற்று கட்சியில் இருந்து வந்தவருக்கு சீட்: முன்னாள் அமைச்சர்கள் அப்செட்

 

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்டு வென்ற தொகுதியாகும். இங்கு இந்த முறை அதிமுக வேட்பாளராக முன்னாள் அரசு தலைமை கொறடா மனோகரன் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தொகுதியை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, பரஞ்சோதி ஆகியோர் சீட் கேட்டு விருப்ப மனு அளித்திருந்தனர். ஆனால் இவர்களுக்கு சீட் வழங்கப்படவில்லை. இதனால் இருவரும் எடப்பாடி பழனிசாமி மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். மனோகரன் அமமுகவுக்கு சென்று விட்டு, கடந்த ஆண்டு தான் அதிமுகவில் சேர்ந்தார்.

மாற்று காட்சியில் இருந்து வந்த மனோகரனுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. காலங்காலமாக கட்சியில் இருக்கும் வளர்மதி, பரஞ்சோதி புறக்கணிக்கப்பட்டுள்ளனர். பணம் வைத்திருப்பவர்களை தேடிப்பார்த்து சீட் வழங்கப்பட்டுள்ளது. இது ஏற்புடையதல்ல என்று பரஞ்சோதி, வளர்மதியின் ஆதரவாளர்கள் குமுறுகின்றனர்.

அதேபோல் ஓ.பன்னீர் செல்வம் அணியில் இருந்து அண்மையில் அதிமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் திருச்சி கிழக்கு தொகுதியை எதிர்பார்த்திருந்தார். சீட் கிடைக்காததால் இவரும் அதிருப்தியில் உள்ளார். முன்னாள் அமைச்சர் சிவபதி தொட்டியத்துக்கு குறி வைத்திருந்தார். இவரது எதிர்பார்ப்பும் நடக்கவில்லை. இதனால் 4 முன்னாள் அமைச்சர்களும் தலைமை மீது கடும் அதிருப்தியில் இருப்பதாக அதிமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Tags : Alternative Party ,Srirangam ,Jayalalithaa ,Tiruchi ,Assembly Constituency ,Trichy District ,Chief Minister ,Jayalalitha ,Former Head ,Korada Manokaran ,
× RELATED திமுக கூட்டணியில் மதிமுக...