ஊதா நிற முட்டைக்கோஸ் பயிரிட விவசாயிகள் ஆர்வம்

மஞ்சூர் : ஊதா நிற முட்டைக்கோஸ்களை பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள முள்ளிகூர், பிக்கட்டி, சிவசக்திநகர், லாரன்ஸ், எமரால்டு, அண்ணாநகர், இந்திராநகர், இத்தலார், நஞ்சநாடு, பேலிதளா, முத்தொரை, பாலாடா, கேத்தி பாலாடா, குன்னக்கொம்பை, சேலாஸ், மஞ்சக்கம்பை உள்ளி்ட்ட பகுதிகளில் மலை காய்கறி விவசாயம் பெருமளவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது இந்த பகுதிகளில் பல ஏக்கர் பரப்பில் உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், பட்டாணி, அவரை, பீன்ஸ், முட்டைக்கோஸ், காலிபிளவர், வெள்ளைப் பூண்டு உள்ளிட்ட பல காய்கறிகளை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.

இதனுடன் ஊதா நிற முட்டைக்கோஸ்களை பயிரிடுவதிலும் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்த ஊதா நிற முட்டைக்கோஸ்களுக்கு சந்தையில் கிராக்கி உள்ளதாக கூறப்படுவதால் விலையும் கூடுதலாக கிடைக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தார்கள்.

Related Stories: