- கோடியேஸ்வரன் நிகழ்வு
- மீ ஆ.
- Dasildar
- ஷியப்பூர்
- அமிதா சிங் தோமர்
- சந்திரவாத்தி நாகா
- குவாலியர் மாவட்டம், மத்திய பிரதேசம்
- விஜயாபூர் தலுகா
ஷியோபூர்: மத்தியபிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தில் உள்ள சந்திரவத்னி நாக்கா பகுதியை சேர்ந்த பெண் அமிதா சிங் தோமர். இவர் விஜயபூர் தாலுகாவில் தாசில்தாராக பொறுப்பு வகித்து வந்தார். இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியின் நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, திறமையாக விளையாடி நடிகர் அமிதாபப்பச்சனிடம் ரூ.50 லட்சம் பரிசு வென்றார். இதன் மூலம் அவர் பிரபலமடைந்தார். இந்நிலையில், மத்தியபிரதேச மாநிலத்தில் கடந்த 2021ம் ஆண்டு பெய்த கனமழையால் வௌ்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அப்போது ஏழை விவசாயிகள், கிராம மக்கள் தங்கள் வீடு, உடைமைகளை இழந்து தவித்தனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வௌ்ள நிவாரண நிதி வழங்கும் பணி அமிதா சிங் தோமர் தலைமையிலான குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், அமிதா சிங் தோமர் தலைமையிலான குழு, உண்மையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி வழங்காமல், போலியான கணக்குகளை உருவாக்கி அதன் மூலம் ரூ.2.5 கோடி மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்த புகாரின் அடிப்படையில் ஏற்கனவே 110 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வெள்ள நிவாரண நிதி மோசடி விவகாரத்தில் பெண் தாசில்தார் அமிதா சிங் தோமரை குவாலியர் காவல்துறையினர் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
