அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தி வருகிறார். தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், அசாம், மே.வங்க முதலமைச்சர்கள் ஆலோசனையில் பங்கேற்பில்லை. மேற்காசிய போர்சூழல் குறித்தும், அதற்கு மாநிலங்கள் தயாராக இருப்பது குறித்தும் ஆலோசனை. மேற்காசிய போர் நீடிக்கும் பட்சத்தில் அதற்கு மாநிலங்கள் எவ்வாறு தயாராக இருக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனை.
நடத்தி வருகிறார்
இந்தியாவின் வலுவான வளர்ச்சிப் பாதை தொடர்வதை உறுதி செய்யுமாறு மாநில அரசுகளை ஊக்குவித்த பிரதமர் மோடி, கோவிட்-19 பெருந்தொற்றின் போது, ஒன்றிய அரசும் மாநிலங்களும் இணைந்து பரிசோதனை, தடுப்பூசி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் ஆகியவற்றில் ஒத்துழைத்த முன்மாதிரியான ‘டீம் இந்தியா’ உணர்வை நினைவு கூர்ந்தார். அதே உணர்வு இப்போதும் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
அனைத்து மாநில அரசுகள் மற்றும் ஒன்றிய அரசின் ஒருங்கிணைந்த முயற்சிகளால், இந்த கடுமையான உலகளாவிய நெருக்கடியை நாடு திறம்பட எதிர்கொள்ள முடியும். அதே ‘டீம் இந்தியா’ உணர்வை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்,” என்று பிரதமர் மோடி கூறியிருந்தார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் கையிருப்பு, விநியோகம் ஆகியவை குறித்து விவாதிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தேர்தல் விதிகளால் 5 மாநில முதலமைச்சர்கள் மட்டும் இக்கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.
