குஜிலியம்பாறை, மார்ச் 27: குஜிலியம்பாறையை அடுத்துள்ள செல்லபட்டநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் மாரி(65). இவரது உறவினர் பொம்மாநாயக்கன்பட்டியை சேர்ந்த ரெங்கசாமி (66). இருவரும் இரு தினங்களுக்கு முன்னர் டூவீலரில், ராமகிரி-உல்லியக்கோட்டை சாலையில் உள்ள உறவினரது தோட்டத்திற்கு சென்றனர். அப்போது தோட்டத்திற்கு செல்லும் பாதையில் வழிமறித்து 6 பேர் கொண்ட கும்பல் மது அருந்தி கொண்டிருந்துள்ளது.
பாதையில் அமர்ந்து மது அருந்த கூடாது என்றும் தோட்டத்திற்கு செல்வதற்கு வழிவிடுமாறும் இருவரும் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் இருவரையும் தாக்கி, அவர்கள் வைத்திருந்த ரூ.61 ஆயிரம் பணம் மற்றும் செல்போனை பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின்பேரில் குஜிலியம்பாறை போலீசார் வழக்கு பதிந்து, தப்பியோடிய 6 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர்.
