மதுரை, மார்ச் 27: மதுரை மாவட்டத்திலுள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலுக்கு 3079 வாக்குசாவடிகள் அமைக்கப்படுகின்றன. இவற்றில் வாக்குப் பதிவு நடைபெறும் ஏப். 23ம் தேதி, ஒரு பூத்திற்கு 4 அலுவலர்கள் என்ற அடிப்படையில், 12,316 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் பணியில் இருப்போருக்கு உடல்நிலை பாதிப்பு ஏதும் ஏற்பட்டால், அவர்களுக்கு மாற்றாக பணிகளில் ஈடுபட 2464 பேர் தயார் நிலையில் காத்திருப்போராக வைக்கப்படுகின்றனர்.
இதன்படி மாவட்டத்தில் 14,780 ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். இவர்கள் வாக்குப் பதிவு அலுவலர், அடுத்ததாக 3 நிலையில் உள்ள அலுவலர்கள் என வாக்குச்சாவடி வாயிலாக பணியில் ஈடுபடுவர். இவர்களுக்கு தேர்தல் தொடர்பான பயிற்சி வகுப்புகள் நாளை (மார்ச் 28) 10 ெதாகுதிகளின் தலைமையிடங்களில் நடைபெற உள்ளது.
