×

தாமரை சின்னத்தில் போட்டியிடும் ஜி.கே.வாசன் முடிவுக்கு கட்சிக்குள் எதிர்ப்பு: நிர்வாகிகள் இருவர் விலகல்

சென்னை: தாமரை சின்னத்தில் போட்டியிடும் ஜி.கே.வாசன் முடிவுக்கு கட்சிக்குள் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. ஜி.கே.வாசனின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமாகா நிர்வாகிகள் பிஜு சாக்கோ, புருஷோத்தமன் ஆகியோர் கட்சியில் இருந்து விலகியுள்ளனர்.

இது தொடர்பாக ராஜினாமா செய்த தமாகா மாவட்ட நிர்வாகிகள் அளித்த பேட்டியில்;
2016ல் ஜெயலலிதா 10 தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் நிற்கச் சொன்னபோது, முடியாது எனக் கூறி மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தார். ஆனால் தற்போது பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிட ஒப்புகொண்டுள்ளார்.

எங்களை போன்ற பல மாவட்டத் தலைவர்கள் ஜி.கே.வாசனின் முடிவால் அதிருப்தியில் இருக்கிறோம். எங்களோடு கலந்து ஆலோசிக்காமல் தாமரையில் போட்டியிடும் முடிவை அவர் எடுத்துள்ளார். நாங்கள் அவரோடு சேர்ந்து பலி கடா ஆக முடியாது என கூறியுள்ளனர்.

Tags : G. ,Vassan ,Chennai ,K. ,Tamaga ,Biju Chako ,Purushotaman ,Vasan ,
× RELATED தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களில்...