வேலாயுதம்பாளையம் அருகே தனியார் சர்க்கரை ஆலையில் அச்சுறுத்திய தேனீக்கள்: தீயணைப்பு வீரர்கள் அகற்றினர்

வேலாயுதம்பாளையம், மார்ச். 25: கரூர் மாவட்டம் புகளூர் செம்படாபாளையத்தில் தனியார் சர்க்கரை ஆலை உள்ளது. இந்த சர்க்கரை ஆலைக்கு கரூர் மாவட்டம், ஈரோடு மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகளிடம் கரும்பை வெட்டிக்கொண்டு வந்து அஸ்காசர்க்கரை தயார் செய்து வருகின்றனர். இந்நிலையில் கரும்பு சாறு பிழியும் இயந்திரம் அருகே ஆஸ்கா சர்க்கரை தயாரிக்கும் பகுதியில் ஆயிரக்கணக்கான மலைத் தேனீக்கள் கூடுகட்டி அந்த வழியாகச் செல்லும் தொழிலாளர்களையும், அதிகாரிகளையும் அச்சுறுத்தியது.

இதுகுறித்து புகளூர் தனியார் சர்க்கரை ஆலை அதிகாரி அருண் புகளூர் தீயணைப்பு துறையினரிடம் புகார் கொடுத்து மலைத் தேனீக்களை அகற்றித் தருமாறு கோரிக்கை விடுத்தார். அதனடிப்படையில் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட தனியார் சர்க்கரை ஆலைக்கு விரைந்து சென்று சர்க்கரை ஆலைக்குள் கூடு கட்டி தொழிலாளர்களையும், அதிகாரிகளையும் தீண்டி அச்சுறுத்தி வந்த ஆயிரக்கணக்கான மலைத் தேனீக்களை தண்ணீரை பீச்சியடித்து நீண்டநேரம் போராடி அகற்றினர்.

 

Related Stories: