திருப்பதி : திருமலை திருப்பதி தேவஸ்தானம் அலுவலகம் அருகே ஒப்பந்த ஊழியர்கள் சிஐடியு மாவட்ட பொதுச் செயலாளர் சுப்பிரமணியம் தலைமையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர் பேசியதாவது: திருமலை மற்றும் திருப்பதியில் ஒப்பந்த பணியாளர்கள் சுகாதாரத் துறைகளில் பணியாற்றி வருகிறார்கள்.
பிரமோற்சவம் நிறைவடைந்து 5 மாதங்கள் ஆகிய நிலையில் இதுவரை ஒப்பந்த ஊழியர்களுக்கு பிரமோற்சவ சன்மானம் வழங்கப்படாதிருப்பது சரியில்லை. திருமலை தேவஸ்தான நிர்வாகம் உடனடியாக பதிலளித்து பிரமோற்சவ சன்மானம் வழங்க வேண்டும்.
பல ஆண்டுகளாக, ஒரு பாரம்பரியமாக, பிரமோற்சவங்களுக்குப் பிறகு லட்டு மற்றும் வடை வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக, அவர்கள் எவ்எம்எஸ் பணியாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு லட்டு மற்றும் வடை வழங்குவதை நிறுத்திவிட்டனர். கடந்த காலத்தில் மறுக்கப்பட்டவர்களுக்கு லட்டு மற்றும் வடை வழங்கப்பட வேண்டும்.
பணியில் இருக்கும்போது விபத்துகளில் உயிரிழக்கும் பணியாளர்களுக்கு விபத்துக் காப்பீட்டின் கீழ் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அனைத்து ஒப்பந்தப் பணியாளர்களுக்கும் அன்னபிரசாத உணவகம் ஒன்று அமைக்கப்பட வேண்டும். தரிசன வசதியுடன், லட்டு அட்டைகளையும் வழங்க வேண்டும் என்றார். பின்னர் இந்த கோரிக்கை மனுக்கை டிடிடி அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.
