சென்னை: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நடைபெறும் தேர்தல் பறக்கும் படையினரின் வாகன சோதனையில் இதுவரை ரூ.151 கோடி பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பாக சி-விஜில் செயலி மூலம் இதுவரை 794 புகார்கள் பெறப்பட்டுள்ளன. 20 புகார்கள் பரிசீலனையில் உள்ளன, மற்ற அனைத்து புகார்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
