சென்னை : சென்னை தியாகராயர் நகரில் பறக்கும் படையினரின் வாகன சோதனையில் 10 டம்மி துப்பாக்கிகள் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவ்வழியே சென்ற வேனை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தபோது அதில் ஏகே 47 உள்ளிட்ட 10 துப்பாக்கிகள் இருந்தன. விசாரணையில் சினிமா படப்பிடிப்புக்காக பயன்படுத்தும் டம்மி துப்பாக்கிகள் என தெரிய வந்தது.
