சென்னை: தமிழ்நாட்டில் துரந்தர் 2 படத்தைத் தடை செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில், அரசியல் சார்பான கருத்துகள் படத்தில் உள்ளதாக வழக்கறிஞர் ஷீலா என்பவர் புகார் அளித்துள்ளார்.
நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான பிரம்மாண்ட திரைப்படம் துரந்தர் 2. இப்படத்தின் முதல் பாகம் வெளியாகி ஹிட் அடித்தது. இதையடுத்து கடந்த 19ம் தேதி வெளியான துரந்தர் 2 ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் துரந்தர்2 படத்தை வெளியிட தடைவிதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 15ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் இப்படத்தில் அரசியல் தொடர்பான சார்பு கருத்துகள் இடம் பெற்றுள்ளது எனவும் இப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிட அனுமத்தித்தால் அரசியல் தாக்கத்தை உண்டாக்கும் எனவே துரந்தர்2 படத்தை தடை வித்திக்க வேண்டும் என வழக்கறிஞர் ஷீலா என்பவர் அவசர முறையீடு செய்துள்ளார்.
தேர்தலுக்கு பின்னர் துரந்தர்2 படத்தை தமிழ்நாட்டில் வெளியிட அனுமதிக்க வேண்டும் எனவும் அதுவரை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் அவரச முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து மனுவாக தாக்கல் செய்துவிட்டு மீண்டும் முறையீடு செய்ய தலைமை நீதிபதி அமர்வு அறிவுத்தினார். எனவே துரந்தர்2 பட வழக்கு இன்றோ அல்லது நாளையோ விசாரணைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
