×

மீன் வரத்து குறைவால் மீன்கள் விலை கிடு கிடு உயர்வு

 

கோவை, மார்ச் 23: கோவை உக்கடம் லாரிப்பேட்டை பகுதியில் உள்ள மொத்த மீன் மார்க்கெட்டிற்கு தூத்துக்குடி, ராமேஸ்வரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் மீன்கள் வருகிறது. இந்த நிலையில் தமிழக, கேரளாவில் இருந்து வரக்கூடிய மீன்களின் வரத்து குறைந்துள்ளது. மேலும், ரம்ஜான் முடிந்து முதல் ஞாயிற்றுகிழமை என்பதாலும் நேற்று வழக்கத்தை விட மீன் விலை அதிகரித்து இருந்தது. அதன் படி நேற்று வஞ்சிரம் கிலோவிற்கு ரூ.900, சின்ன ஊழி ரூ.400, அயிலை ரூ.300, மத்தி ரூ. 300, இறால் ரூ.550, அயிலை ரூ.300, கிளி மீன் ரூ.500, விலை மீன் ரூ.300, திருக்கை ரூ.250, கொடுவாய் ரூ.600 கண்ணாடி பாறை ரூ. 130 என விற்பனையானது.

Tags : Coimbatore ,Ukkadam Laripettai ,Thoothukudi ,Rameswaram ,Nagapattinam ,Kerala ,Karnataka ,Tamil Nadu ,Kerala… ,
× RELATED நவீன வேலியை தாண்ட முயன்ற காட்டு யானை