விருத்தாசுரன் என்ற அரக்கன் பிரம்மாவிடம் வரம் பெற்றிருந்தான். அவன் பெற்றிருந்த சக்தியால் தேவர்களை துன்புறுத்தினான். அந்த அரக்கனிடமிருந்து தங்களை காக்கும்படி இந்திரனிடம் முறையிட்டனர். ததீசி முனிவரின் முதுகுத் தண்டை ஆயுதமாகப் பெற்று இந்திரன் விருத்தாசுரனிடம் போரிட்டு அழித்தான். இந்த காரணத்தால் தேவலோகத் தலைவன் இந்திரனுக்கு தோஷம் ஏற்பட்டது. இந்திரப் பதவியையும் இழந்தான். இந்தப் பதவியை மீண்டும் பெற குருவிடம் ஆலோசனை செய்தான். அதன்படி, சிவனை வழிபட்டால் இந்த தோஷத்திற்கான விமோசனம் கிடைக்கும் என்று ஆலோசனை கூறினார். இந்திரனும் பூலோகத்திற்கு வந்து பல இடங்கள் தேடி அலைந்தான். அந்த தருணத்தில்தான் அடர்ந்த வனத்தின் நடுவில் உள்ள சுயம்பு முர்த்தியை கண்டான். சிவபெருமானும் காட்சி தந்து அருள் செய்தார். தர்மத்திற்காக செய்த செயலால் பாவம் ஏற்படாது என அருள் செய்தார்.
இந்த திருத்தலத்தில் பிரம்மேசர், முனியீசர் என்ற இரு சிவலிங்கங்கள் உள்ளன. இவருக்கு ஆரண்யேஸ்வரர் காட்டழகர் என்ற பெயரும் உண்டு. ஆரண்யர் என்ற முனிவர் வழிபட்டதால் ஆரண்யேஸ்வரர் என்ற அழைக்கப்படுகிறார். இந்த தலத்தில் கந்தர்வன் ஒருவன் நண்டு வடிவம் கொண்டு விநாயகரை வழிபட்டு இருக்கிறான். இத் தலத்தில் உள்ள விநாயகரை நண்டு விநாயகர் என்றழைக்கப்படுகிறார். இங்கு விநாயகருக்கு வேண்டிய முஷிக வாகனம் இல்லை. நண்டு இவருக்கு வாகனமாக உள்ளது.இது பாடல் பெற்ற திருத்தலமாக உள்ளது. இங்குள்ள தட்சிணாமூர்த்தி ஆறு சீடர்களுடன் வீற்றிருக்கிறார். இவர் ராஜயோக தட்சிணாமூர்த்தி என்றழைக்கப்படுகிறார். ஆரண்யம் என்றால் காடு அல்லது வனம் என்று பொருள். வனத்தில் சுயம்புவாக உள்ள ஈஸ்வரன்.
இங்குள்ள தெய்வங்களுக்கு சூரியன், சந்திரன், செவ்வாய், வியாழன், கேது ஆகிய கிரகங்கள் நாமகரணம் செய்துள்ளன. அகிலாண்டேஸ்வரி உடனுறை ஆரண்யேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
* ஜாதகத்தில் நான்காம் பாவகத்தில் குரு இருந்தால் இங்கு வழிபட்டு சென்றால் கடல் கடந்து சென்று வழிபடும் வாய்ப்புகள் உண்டாகும்.
* யாருக்கேனும் நான்காம் பாவகமாக கடகம் வந்து அதில் கேது இருந்தால், இங்குள்ள நண்டு விநாயகரை செந்தாமரை மலர் சூட்டி அபிஷேகம் அர்ச்சனை செய்து வழிபட்டால் நற்பலன்கள் கிடைக்கப் பெறுவார்கள்.
* அறியாமல் செய்த தவறுக்காக மன வருத்தம் உண்டானால் இத்தலத்தில் பௌர்ணமி அன்று சுவாமிக்கு எள்ளுருண்டை நைவேத்யமாக கொடுத்து வழிபட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
*ஒன்பதாம் வீட்டில் சூரியன் இருந்தால் இந்த திருத்தலத்தில் சுவாமியை வழிபட்டு கருப்பு நிற பசுவிற்கு உணவு வழங்கினால் நற்பலன் கிடைத்து வாழ்வில் முன்னேற்றத்தை நோக்கி பயணிப்பர். பிரசித்தி பெற்ற திருத்தலமாகும்.
