×

திருச்செந்தூரில் வீடு வீடாக குக்கர் விநியோகம் செய்யும் தவெகவினர்

 

தூத்துக்குடி: தமிழகத்தில் ஏப்.23ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு அனைத்து கட்சியினரும் தீவிரமாக களப்பணி ஆற்றி வருகின்றனர். ஆனால் தற்போது வரை வேட்பாளர்கள் அறிவிக்கப்படாத நிலையில் தங்களுக்கு தான் சீட் கிடைக்கும் என்ற எண்ணத்தில் சிலர் வாக்காளர்களையும், கட்சி நிர்வாகிகளையும் வெகுமதிகள் கொடுத்து கவர திட்டமிட்டுள்ளனர். அதிமுகவைப் போலவே புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தவெகவும் பரிசுப் பொருட்களை வழங்கி வாக்காளர்களை ‘கவர்’ செய்ய நினைக்கிறது.

அந்த வகையில் திருச்செந்தூர் தொகுதி முழுவதும் தவெக சார்பில் குக்கர் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அந்த குக்கரில் இடம் பெற்றுள்ள ஸ்டிக்கரில் விசில் சின்னம் இடம் பெற்றுள்ளது. அந்த ஸ்டிக்கரில் தவெக நிர்வாகி ஜேகேஆர் முருகன் பெயர், படம் ஆகியவை இடம் பெற்றுள்ளது. இந்த குக்கருடன் விசில், கடலைமிட்டாய், அவரது பெயர், கட்சி பார்டர் கொண்ட டவல்களை தொண்டர்களிடமும், பூத் கமிட்டி நிர்வாகிகளிடமும் தவெகவினர் வழங்கி வருகின்றனர். தற்போது உடன்குடி பகுதியில் பல்வேறு இடங்களில் குக்கர் உள்ளிட்டவற்றை பதுக்கி வைத்து தவெக நிர்வாகிகள் வீடு, வீடாக வழங்கி வருகின்றனர்.

அதே நேரத்தில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அமமுகவும் குக்கர் சின்னத்தில் போட்டியிடும் நிலையில், இது தான் உங்கள் சின்னமா என வாக்காளர்கள் எழுப்பும் கேள்விகளால் தவெகவினர் தடுமாறுகிறார்களாம். குக்கரையும் கொடுத்து விட்டு ஓட்டு மாறி விடக் கூடாதே என கவலைப்படுகின்றனராம்.

Tags : Tricendur ,Tamil Nadu ,
× RELATED பா.ஜ. மேலிடம் அதிரடி முடிவு;...