×

அருமனை அருகே வலையில் சிக்கிய மலைப்பாம்பு வனத்துறையினர் மீட்டனர்

அருமனை, மார்ச் 21: அருமனை அருகே களியல் பகுதியை சேர்ந்தவர் ராபின். அங்குள்ள ஒரு மளிகை கடையில் வேலை செய்து வருகிறார். இவரது வீட்டில் கோழிகளை வளர்த்து வருகிறார். இதன் அருகில் ஒரு வாழை தோட்டம் உள்ளது. அங்கு கோழிகள் செல்லாமல் இருப்பதற்காக நைலான் வலையை சுற்றி கட்டியுள்ளார். இந்தநிலையில் வாழை தோட்டத்தில் பதுங்கியிருந்த மலைபாம்பு கோழியை உண்பதற்காக வந்துள்ளது. ஆனால் எதிர்பாராவிதமாக வலையில் சிக்கி கொண்டது. சத்தம் அதிகமாக கேட்டதால் ராபின் சென்று பார்த்துள்ளார். அப்போது பாம்பு வலையில் சிக்கியது தெரிந்தது. உடனே களியல் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் அங்கு வந்த வனத்துறையினர் 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பை லாவகமாக வலையில் இருந்து மீட்டனர். பின்னர் குத்திரங்கமூட்டிலுள்ள அணைப்பகுதிக்கு கொண்டு சென்று மலைப்பாம்பை விட்டனர்.

Tags : Arumanai ,Robin ,Kaliyal ,
× RELATED சென்னை மாவட்டத்தில் உள்ள...