×

பிரீமியம் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.2.30 வரை உயர்த்தியது எண்ணெய் நிறுவனங்கள்

 

சென்னை: பிரீமியம் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.2.30 வரை உயர்த்தி இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயல் நிறுவனங்கள் அறிவித்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் ரூ.99.87க்கு விற்கப்பட்டு வந்த பிரீமியம் பெட்ரோல் தற்போது ரூ.101.89க்கு விற்பனை செய்யப்படுகிறது. சாதாரண வகை பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால் பிரீமியம் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளது.

Tags : Chennai ,Hindustan Petroleum ,
× RELATED அமெரிக்க பங்குச்சந்தை ஒரு மாதத்தில் ரூ.282 லட்சம் கோடி இழப்பு!!