தூத்துக்குடி: விளாத்திகுளம் அருகே மாணவியை கொலை செய்த வழக்கில் கைதான தர்ம முனீஸ்வரன் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார். கொலை செய்த பிறகு சில நாட்கள் அதே கிராமத்தில் தர்ம முனீஸ்வரன் சுற்றித்திரிந்ததாக தகவல் தெரிவித்துள்ளார். கொலை நடந்த மறுநாள் எதுவும் தெரியாதது போல கிராம மக்களிடம் தர்ம முனீஸ்வரன் விசாரித்துள்ளார். நகைகளை பறிக்க திட்டமிட்டபோது மாணவியை கொலை செய்ததாக தங்க முனீஸ்வரன் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது. மாணவியிடம் தங்க நகை எதுவும் இல்லாததால் வன்கொடுமை செய்து உடலை புதரில் வீசியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
