சென்னை: ஜவுளி ஏற்றுமதியில் திராவிட மாடலின் 4 ஆண்டுகளில் 29% வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் அடைந்துள்ளார். இது குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைத்தள பதிவு: ஜவுளி ஏற்றுமதியில் திராவிட மாடலின் 4 ஆண்டுகளில் 29% வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. குஜராத்தையும் மகாராஷ்டிராவையும் பின்னுக்கு தள்ளி தமிழ்நாடு முதலிடம். 2020-21ல் 6,193.39 மில்லியன் டாலராக இருந்த தமிழ்நாட்டின் ஏற்றுமதி அளவு, திராவிட மாடல் அரசின் திட்டமிட்ட நடவடிக்கைகளினால் அடுத்த நான்காண்டுகளில் 7,997.17 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் தமிழ்நாடு மட்டுமே 21.84%! இவை அனைத்தையும் சொல்வது நாமல்ல, ஒன்றிய அரசு. சாதனைகளைச் சொல்லி வெல்வோம் ஒன்றாக. இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
